Thursday, December 01, 2005

திரைக் கவிதைகள் [2]

நாயகன் விட்டுச் சென்ற பின்பே, தனக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை காதலி உணர்கிறாள். அவளது எண்ணங்கள் கவிதையாக,

பூமியென்பது தூரமானதே
நட்சத்திரங்கள் பக்கமானதே.............
மனிதர் பேசும் பாஷை மறந்து
பறவைகளோடு பேசத் தோன்றுதே............

தன் மன மாற்றத்திற்குப் பெயர்தான் காதலா என நினைக்கிறாள்.
          
இது காதலா  
இதுதான் காதலா
இதுவே காதலா
இதுவும் காதலா ?..............             [பூவேலி ].

தன் காதலை உணர்ந்து காதலனை நினைத்துப் பாடுகிறாள் இவ்வாறு.................

நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை விட்டு விட்டுச் சென்றாயே................. [ஆறு ]

பின்பு தன் காதலனைத் தேடத் தொடங்குகிறாள் காதலும் கவிதையுமாக பின்வருமாறு.

பூங்காற்றிலே உன் சுவாசத்தைத் தனியாகத் தேடிப் பார்த்தேன்
கடல்மேல் ஒரு துளி விழுந்ததே அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்  [உயிரே]

இதற்கிடையே காதலனும்,
     தாமதிக்கும் ஒவ்வொரு கனமும்
     தவணை முறையில் மரணம் நிகழும்
     அருகில் வாராயோ விரல்கள் தாராயோ நீ......................................  [காக்க காக்க]

என காதலியின் வருகைக்காக உருகுகிறான்.  இருவரும் சந்தித்தனரா?

2 Comments:

Blogger சினேகிதி said...

nalla iruku ungada thogupukal...
\\நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை விட்டு விட்டுச் சென்றாயே\\
ivai yarudiya varigal?

4:47 PM  
Blogger Govind said...

எழுதியவர் யார் என்று தெரியவில்லை... விரைவில் கூறுகிறேன்

8:27 PM  

Post a Comment

<< Home

Free Web Counter
Free Hit Counter